Saturday 28 August 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஆகஸ்ட் - 2021 இதழ் பாரத சுதந்திரத்தின் 75-வது ஆண்டுத் துவக்கத்தைக் குறிக்கும் வண்ணம் பாரத மாதாவின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. ஸ்ரீ அரவிந்தரின் உத்தரவின் பேரில் ஸ்ரீ தி.வி. கபாலி சாஸ்திரி அவர்களால் எழுதப்பட்ட பாரதீ ஸ்தவம் என்ற    நூலில் இருந்து பிரார்த்தனைப் பாடல்கள் இம்மாத மந்திரமாக வந்துள்ளன. நிறைவான பன்முக வளர்ச்சிக் கட்டுரை உங்கள் கவனத்திற்குரியது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல். குரு நித்ய சைதன்யரின் பிரணவ விளக்கம் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. மிகச் சிறப்பான கட்டுரைத் தெரடர் இது.  

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!


No comments:

Post a Comment