Saturday 18 May 2019

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் மே 2019 இதழ் 34 ஆண்டுகளை நிறைவு செய்து, 35-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. வாசகர்கள், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், எழுத்தாக்கம் செய்பவர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் தான் இப்பத்திரிக்கை இவ்வளவு நீண்டகாலம் பணிபுரிந்து வர முடிந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி, நலம் பெருகப் பிரார்த்தனைகள்.
இவ்விதழ் ஸ்ரீ ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் ஆகியேரரின் பிறந்த நாளை ஒட்டி, அம்மகான்களின் திருவுருவப் படங்களை அட்டையில் தாங்கி வருகிறது. மனப்பூர்வமாக எழுதப்படும் வாழ்க்கை வரலாற்று நூல்கள், நெஞ்சைத் தெரடும் என்பதற்கு, பசுமைப் பேரராளி டாக்டர் ரேரபிதாவின் வாழ்க்கை வரலாறே சான்று.
உலகமுழுதும் மாற்று மருத்துவ நெறிகள் மக்கள் மனத்தில் இடம் பெற்று வருவதை மூன்று கட்டுரைகள் எடுத்துக் காட்டுகின்றன. மதமாற்றம் பற்றிய காந்தியச் சிந்தனைகள் கவனத்திற்குரியவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!