Wednesday 10 August 2016

August 2016-விவேக வாணி

விவேகவாணியின் ஆகஸ்ட் - 2016 இதழ் சுதந்திர தினத்தைக் குறிக்கும் வண்ணம் நம் தேசீயக் கொடியை மலராகச் சித்தரிக்கிறது. விவேகவாணியில் தொடராக வரும் மலர் மருத்துவக் கட்டுரை வாசகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அவ்விஷயத்திலும் அட்டைப்பபடம் மலர்களைத் தாங்கி வெளி வருவது பொருத்தமே. இப்புனித நாளை ஒட்டி பங்கிம் சந்திரரின் புகழ்பெற்ற தேசீய பாடலாகிய வந்தே மாதரமும் அதற்கு பாரதியார் செய்த அற்புதமான தமிழாக்கமும் வெளியாகி உள்ளன. ஸ்ரீ அரவிந்தரின் புனித நாளைக் குறிக்கும் வண்ணம் அவர் ஓம்காரம் பற்றிக் கூறிய கருத்துக்கள் இவ்விதழில் பிரசுரமாகத் தொடங்குவது பொருத்தமே. ஆகஸ்ட் 15, மற்றும் 16 ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி அடைந்த நாள் ஆகும். குரு மஹாராஜை வணங்கி நலன்கள் பெறுவோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!




                          Subscribe Online     or      Get Online eMagazine

July 2016-விவேக வாணி

விவேகவாணியின் ஜூலை - 2016 இதழ் விவேகானந்த கேந்திர ஆண்டறிக்கையாக தமிழில் வெளி வருகிறது. இதன் பிரதிகள் சுமார் இரண்டரை லட்சம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மராட்டியிலும் தமிழிலும் அச்சிடப்பட்டு கேந்திரப் புரவலர்களைச் சென்றடையும். கேந்திரப் புரவலர்களாக இவ்விதழைப் பெறும் தமிழ் வாசகர்கள் விவேகவாணி சந்தாதாரர்களாக இல்லாவிட்டால் இப்பத்திரிகைக்குச் சந்தா அனுப்பி கேந்திரக் குடும்பத்தில் இணையும்படி அன்புடன் அழைக்கின்றோம். மாதம் ஒரு மந்திரமாக ஓம்கார விளக்கமும் வெளியாகின்றது. ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கைக்கும் உள்ள உறவை எடுத்து விளக்கும் கட்டுரை இவ்விதழிலும் தொடர்கிறது. அடுத்த இதழில் விவேகவாணியின் வழக்கமான அம்சங்கள் வெளி வரும். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!



                          Subscribe Online     or      Get Online eMagazine

June 2016-விவேக வாணி

விவேகவாணியின் ஜூன் - 2016 இதழில் பிரணவம் எனும் ஓம்காரம் தொடரின் 300-வது பகுதியைக் குறிக்கும் வண்ணம் சிறப்பிதழாக வெளி வருகிறது. அட்டைப் படத்தில் பல்வேறு மொழிகளில், எழுத்துக்களில் ஓம்காரத்தின் சித்திரத்தை வெளியிட்டுள்ளோம். மாதம் ஒரு மந்திரமாக ஓம்காரத்தின் பெருமை கடோபநிஷதத்தில் இருந்து எடுத்தாளப்பட்டு வெளியாகிறது. ஸ்ரீ ராமானுஜரின் 1000-மாவது பிறந்த நாளைப் போற்றும் வண்ணம் ஆழ்வார்களின் கருத்துக்களுக்கும் உள்ள ஒப்புமை பற்றிய தொடர் இவ்விதழில் தொடங்குகிறது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்! 



                          Subscribe Online     or      Get Online eMagazine